திட்ட விவரம்

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 4 நாள்




நீ தேவனுடைய ஆலயம்!

சங்கீதம் 27ல், தேவனுடைய வீட்டைப் பற்றி பேசும் வசனம் 4ஐ தொடர்ந்து பார்ப்போம்.

"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்." (வேதாகமம், சங்கீதம் 27:4). நீ பாதுகாப்பாய் இருக்கும் ஒரு இடம் இருக்கிறது, அங்கு எதுவும் உன்னைத் தொட முடியாது... அது கர்த்தருடைய வீடு. ஆண்டவரின் மகத்துவத்தையும் அழகையும் காணக்கூடிய அமைதியான இடம் என்பதால் தாவீது அங்கு வாழ ஏக்கம் கொண்டார்.

ஆனால் இந்த இடம் எங்கே இருக்கிறது? தாவீதைப் பொறுத்தவரை, அது எருசலேமின் ஆலயமாக இருந்தது, ஏனென்றால் அந்த நேரத்தில், இயேசுவின் வருகைக்கு முன்பு, ஆண்டவர் ஒரு பூமிக்குரிய இருப்பிடத்தில் தம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தினார். பின்னர் கிறிஸ்து, ஆண்டவருடனான ஒரு புதிய உடன்படிக்கையை அறிமுகப்படுத்த வந்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல், “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை" என்று சொல்லுகிறார் (வேதாகமம், அப்போஸ்தலர் 17:24).

அப்படியானால், அவர் எங்கு வாழ்கிறார்? உன்னில்! “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1 கொரிந்தியர் 3:16)

இதை உணர்ந்தாயா? நீதான் தேவனுடைய ஆலயம்!

எனவே, தேவனுடைய வீட்டில் வசிப்பது என்பது பரிசுத்த ஆவியானவரை வரவேற்பதாகும். அதன் அர்த்தம் நீ உனக்குள் இருக்கும் அவரது வாசஸ்தலத்தை ரசிப்பதாகும். நீ ஆண்டவரின் சிருஷ்டியாய் இருக்கிறாய். அவருடைய பிரசன்னம் உனக்குள் இருக்கிறது. நீ உன் முழு வாழ்க்கையையும் கர்த்தருடைய வீட்டில் வாழலாம், ஏனென்றால் அவருடைய வீடு நீதான், அவருடைய மகத்துவமான பிரசன்னம் உனக்குள் என்றென்றும் இருக்கும்! இது ஆச்சரியம் இல்லையா?

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்