திட்ட விவரம்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 8 நாள்


மிகப்பெரியப் பரிமாற்றம்


ஏற்றுக்கொள்ளப்படுதல், சமாதானம், மன்னிப்பு ஆகிய அன்பளிப்புகளைக் கொடுக்க இயேசு உலகத்துக்கு வந்தார், ஆனால் அந்த அன்பளிப்புகள் விலைக் குறைந்தவை அல்ல. இயேசு நமக்குக் கொடுக்க வந்தவற்றை நம்மால் ஒருபோதும் சம்பாதிக்க முடியாது, நல்ல வேளை அந்த அவசியமும் நமக்கு இல்லை. தேவன் இப்போது நம்மை ஏற்றுக்கொள்வது நம் நல்நடத்தையால் அல்ல, ஆனால் நம் சார்பாக இயேசு மிகப்பெரியப் புறக்கணிப்பை அனுபவித்ததால் அவர் அந்தப் விலையை செலுத்தினார். நம் பாவங்களை மூட, மரணத்தை மேற்கொள்ள, நமக்கு வாழ்க்கைக் கொடுக்கவே இயேசு மரிக்கத் தேர்ந்தெடுத்தார். ஏசாயா தீர்க்கதரிசி நம் பாவங்களை "மீறுதல்கள்" என்றும் "அக்கிரமங்கள்" என்றும் அழைக்கிறார். சொல்லப்போனால், நம் குற்றங்கள், பொல்லாப்புகள் என்றும் சொல்லலாம். அந்த பாவங்கள் நம்மால் திருப்பி செலுத்த முடியாத கடனை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இயேசு தன் பூரணத்தினால், அதனை செய்தார். இயேசு தான் காயப்படவும் ஒடுக்கவும் படும் உலகில் வந்துப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார். அதன் மூலம், சமாதானத்தையும் சுகத்தையும் நமக்குக் கொண்டு வந்தார்.


தேவனுடைய மிகப்பெரிய பரிமாற்றத்தை ஏசாயா 53இல் உள்ள தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது: நாம் அனைவரின் வாழ்க்கைக்கு பதிலாகவும் இயேசுவின் உயிர். கிறிஸ்துப் பிறப்பின் விலை இயேசுவுக்குத் தெரியும். நாம் அவரையும் அவர் நமக்காகப் பெற்றுத் தந்த நித்திய ஜீவனையும் தழுவிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசு அந்த விலையைத் தழுவிக்கொண்டார். இந்தக் காலத்தைக் கொண்டாடும் போது, இயேசு கிறிஸ்துப் பிறப்பை தேர்ந்தெடுத்ததால் தான், நாம் மன்னிக்கப்பட, சுகமடைய, விடுதலையாக்கப்பட முடிகிறது என்று மறந்து விடாதீர்கள்.


ஜெபம்: இயேசுவே, என் கடனை அடைப்பதற்குரிய விலையை நீர் செலுத்தியதால் நான் உமக்கு நன்றி சொல்கிறேன். அதற்கு என்னால் நன்றி சொல்லி முடிக்க முடியாது. நீர் இல்லாமல், நான் தொலைந்திருப்பேன். என் சமாதானமாகிய, என்னை சுகமாக்குகிரவராகிய, என் இரட்சகராகிய உம்மை நான் ஆராதிக்கிறேன். கிறிஸ்து பிறப்பை நீர் தேர்ந்தெடுத்ததால் உமக்கு நன்றி. நீர் எனக்கு கொடுக்க வந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொள்ள எனக்கு உதவும். அந்த அன்பளிப்புகளை என்னை சுற்றியுள்ள உலகத்துடன் பகிர்ந்துக் கொள்ளவும் எனக்கு உதவும்.


இன்றையப் படத்தை இங்கு பதிவிறக்கம் செய்யுங்கள். 


வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் ந...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்