திட்ட விவரம்

கோபத்தை மேற்கொள்வது எப்படி?மாதிரி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 ல் 7 நாள்




உன் இருதயம் குணமடைய வேண்டுமா?

உனக்கு எப்போதாகிலும் ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதா? நீ என்ன செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அதில் கிருமி தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க காயத்தை முழுமையாக கழுவி சுத்தம் செய்வது மிகவும் முக்கியம் என்பதை நீ நிச்சயமாய் அறிவாய்.

நாம் அனைவரும் நம்மை கோபப்படுத்தும் சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சில நேரங்களில் கத்தியைப்போல வெட்டுகிற அளவுக்கு சூழ்நிலைகள் மிகவும் மோசமானதாக இருக்கலாம். இதனால் நாம் அதிருப்தியும், விரக்தியும் அடைகிறோம். இந்தக் கோபத்தின் வெளிப்பாடாக கொந்தளிக்கிறோம். நம் செயல்களில் அதை வெளிப்படுத்துகிறோம். நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் இறுதியில் வளரும் என்பது நமக்குத் தெரியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் கோபத்தைத் தணித்து சரிசெய்யாவிட்டால், அது தவிர்க்க முடியாத தொற்றுநோயாக மாறிவிடும்.

சில சமயங்களில் அது வன்முறையாகக் கூட மாறலாம்... அதனால்தான் காயங்களைக் கவனிப்பதும் முன்கூட்டியே கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும்.

“கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் யோபு 5:2ஐ வாசித்துப் பார்க்கவும்)

என் நண்பனே /தோழியே நீ நிர்மூடனைப்போன்ற ஒரு நபர் அல்ல என்று எனக்குத் தெரியும்!

இச்செய்தி உன்னிடம் பேசிக்கொண்டிருக்குமானால், கிறிஸ்துவே உன் நம்பிக்கை என்பதை அறிந்துகொள்! நீ முற்றிலும் விடுதலையடையும்படிக்கு, முக்கியமாக கோபத்திலிருந்து விடுதலையடையும்படிக்கு அவர் உனக்காக மரித்தார்.

கூடுமானால், என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுப்பாயா... "ஆண்டவரே நீர் எனக்குத் தேவை. என் இருதயத்தை கோபத்திலிருந்து குணமாக்கும்; என் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும். என் வாழ்க்கையையும் என் ஆத்துமாவையும் கரிசனையோடு கவனித்துக்கொள்வதற்கு நன்றி. என்னை முழுமையாக குணமாக்குவதற்கு நன்றி! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

நீ மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்தால், அவர்களுக்காகவும் நீ ஜெபிக்கலாம். ஆண்டவரால் நிச்சயம் அதிசயம் செய்ய முடியும் என்பதை மறவாதே!

நீ ஒரு அதிசயம்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்தி...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilovercomeanger

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்