திட்ட விவரம்

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்மாதிரி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

7 ல் 1 நாள்

ஒரு விஷயம் எப்போது உண்மையாகும்?

இப்படிப்பட்ட விஷயங்கள் உண்மையிலேயே எப்போது நடந்தது? யுஎஃப்ஓ(UFO) போன்ற ஏதேனும் உள்ளனவா? கோவிட்-19 பரவலின் உண்மையான சங்கதிகள் என்ன? இது போல பல சூழ்ச்சிகள் நிறைந்த கோட்பாடுகள் உள்ளன. இதுபோன்ற செய்திகள் உண்மையா இல்லையா? உலகில் எவ்வளவோ “போலிச் செய்திகள்” இருக்கின்றன. இப்படிப்பட்ட வதந்திகள் இக்காலத்தில்தானே அதிகம் பரவுகின்றன என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும், இது எல்லாக் காலத்திலும் காணப்பட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்தேன். எப்பேர்ப்பட்ட செய்தியையும் வதந்தியாகப் பரப்புபவர்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் மக்களுக்கு வதந்திகளைக் கேட்டு விவரிப்பதில் ஆர்வமும் காணப்படுகின்றன. இது நமது சகாப்தத்தின் தொடக்கத்திலும் கூட காணப்பட்டதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

லூக்கா ஒரு மருத்துவராய் இருந்தார் மற்றும் அவரது காலத்தில் நன்றாக எழுத படிக்க தெரிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவராய் இருந்தார். இவரும் வதந்திகளை சரியாய் கையாள வேண்டியவராய் இருந்தார். இயேசுவைக் குறித்ததான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்த மக்கள் இயேசுவைக் குறித்து குழப்பமடைந்தனர். நடுத்தர வர்க்கத்தினர் இயேசுவால் ஈர்க்கப்பட்டனர், சாதாரண மக்கள் அவரைப் பின்பற்றினர். அந்த நேரத்தில்தான் இயேசுவைப் பற்றிய செய்தி தலைப்புச் செய்தியாகவும் மற்றும் அண்மைச் செய்தியாகவும் வலம் கொண்டிருந்தது.

அப்போதும் சரி இப்போதும் சரி, மக்களிடம் காணப்பட்ட ஒரு மிகப்பெரிய கேள்வி, இதுதான்: உண்மையில் என்ன நடந்தது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

அந்நாட்களிலும் சரி, இன்றைய நாட்களிலும் சரி, முழுமையாக ஆராய்ந்து, கண்ணாரக் கண்ட சாட்சிகளைக் கேட்டறிந்து, எல்லாவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எழுதுவதுதான் இதற்குச் சரியான பதில் என்று நான் நினைக்கிறேன்.

அதைத்தான் லூக்கா செய்தார். அநேகரிடத்தில் பேசி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒரு முடிவை தனது எழுத்துக்களில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இயேசுவைப் பற்றிய உண்மை சம்பவங்களை எழுதினார். 'இயேசு யார், அவருடைய நோக்கம் என்ன?' என்பவைகளே அவர் கேட்கும் முக்கியக் கேள்விகளாக இருந்தன. அவருடைய புத்தகத்தின் முழு நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் எழுதுவது என்பது ஒரு சிக்கலான வேலையாக இருந்தது. எழுத்தாளர்கள் மிகவும் குறைவாக இருந்தனர் மற்றும் எழுது பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தது. லூக்காவின் நற்செய்தியை எழுதுவதற்கு அந்த நேரத்தில் ஆன செலவு, ஒருவரது வருடாந்திர சம்பளத் தொகையளவாக இருந்தது.

நீங்கள் லூக்காவின் புத்தகத்தை வாசிக்கும்போது, ​​லூக்காவின் எழுத்துப்படி இயேசு யார் என்பதையும், பூமியில் அவருடைய நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்வீர்கள். லூக்காவின் சரித்திரப்பூர்வமான பதிவுகளின் தகவல்களையும் இயேசுவைக் கண்ணாரக் கண்ட பலரின் சாட்சி அறிக்கைகளையும் ஆதாரமாக வைத்து, 'இயேசு யார்?' என்ற கேள்விக்கான பதிலைக்கொண்டுவர லூக்கா உதவி செய்கிறார்.

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=ontheroadtochristmas

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்