திட்ட விவரம்

ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்மாதிரி

ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்

5 ல் 1 நாள்

நாம் ஜெபம் செய்வோம்...

சில நேரங்களில், குறிப்பாக காலை வேளையில், சமாதானத்தை உணரமுடியாமல், எதற்காக ஜெபிக்கத் தொடங்குவது என்று தெரியவில்லையே என்பதுபோல் உணர்கிறாயா? உண்மையிலேயே, எனக்கும் அப்படி இருந்திருக்கிறது.

கடிகாரத்தைப் பார்க்கும்போது, நீ இப்போதே புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அது உனக்குக் கூறுகிறது, ஆனால் நீ உன் இருதயத்தை உற்று நோக்கினால், ஆண்டவர் இல்லாமல் இன்று உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது உனக்குத் தெரியும். நீ எப்போதாவது இப்படி உணர்ந்திருந்தால், இன்று என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்க உன்னை அழைக்கிறேன்…

"இயேசுவே, இந்த நாளை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். இன்று என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனாலும் நீர் எனக்கு நன்மையை மாத்திரம் செய்யும் உண்மையுள்ள ஆண்டவர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்று நீர் என்னோடு கூட இருப்பதால், நான் எதைக் குறித்தும் பயப்படவோ அல்லது மன உளைச்சலில் இருக்கவோ வேண்டியதில்லை. நீர் என் அருகில் இருப்பதையும் உமது கிரியைகளையும் தெளிவாக உணர எனக்கு உதவுவீராக. இன்று நீர் என்னைப் பாதுகாப்பதையும் என்னை ஆசீர்வாதிப்பதையும் நான் காண்பேன் என்று விசுவாசிக்கிறேன்! நீர் என்னை நேசிப்பதால், நீர் எப்போதும் எனக்கு நல்லவராகவே இருக்கிறீர்.

'என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்' என்று தாவீது சொன்னதைப்போல் (சங்கீதம் 62:5) இன்று அந்த இளைப்பாறுதலை அனுபவிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் எனக்கு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், பலத்தையும் தருவதை நான் காண எனக்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன். ஆண்டவரே, உம்மை விசுவாசிப்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்பதை இன்று எனக்குக் காட்டுவீராக, ஏனெனில் நான் உம்மையே விசுவாசிக்கிறேன்.

இன்று என்னைக் கலங்கப்பண்ணுகிற எல்லாவற்றையும்: என் பயங்கள், என் கவலைகள் மற்றும் என் சந்தேகங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். ஏனென்றால், நீர் எனக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை, மாறாக உமது ஆவி என்னைப் பலத்தினாலும், அன்பினாலும், தெளிந்த புத்தியினாலும் நிரப்புகிறது.

இதையே நான் இன்று அனுபவிக்க விரும்புகிறேன்! பரிசுத்த ஆவியானவரே, இன்று என்னில் மிகவும் அபரிவிதமாக கிரியை செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்!

இயேசுவே, இந்த நாளில் எனக்கு தேவையான அனைத்தும் உம்மிடம் இருப்பதற்காக நன்றி. ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன், நீர் அதிசயமானவர் என்று இன்று நான் அறிக்கையிடுகிறேன்! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

ஆமென், ஆமென்! இன்று நான் மீண்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்... நீ ஒரு அதிசயம்! :-)

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்

சமாதானத்தை உணர முடியவில்லையா? நீ கலங்குகிறாயா? ஜெபிப்பது உனக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா? உன்னைப்போலவே நானும் சில சமயங்களில் ஜெபிப்பதற்கு சிரமப்படுகிறேன். ஆனால் நமது ஜெபம், உரையாடல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ராஜ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=connectingwithgod

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்