திட்ட விவரம்
தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!மாதிரி
தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சொல்அகராதியின் கூற்றுப்படி, வாக்குத்தத்தம் என்பது, "ஏதாவது செய்யப்படும் அல்லது செய்யப்படாது என்பதன் அறிவிப்பு" மற்றும் "எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துதல்"ஆகும்.
மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், மனிதர்கள் எல்லாநேரத்திலும் ஆண்டவர்மீது நம்பிக்கைவைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.
வாக்குத்தத்தம் தேவனுக்குத் தேவையில்லை; மாறாக, மனுஷனுக்குத்தான் தேவை! தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சரியானது, முறையானது,மேலும் அவர் மீதான நம்முடைய எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமடையாது என்ற உறுதி மனுஷர்களாகிய நமக்குத்தான் தேவை.
நீங்கள் தேவன் மீது நம்பிக்கைவைப்பது மிகவும் உகந்தது; ஏனென்றால்,“பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல”; “அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19)
நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை உங்களுக்கு அவர் காட்ட விரும்புகிறபடியால், அவர் தம்முடைய வாக்குத்தத்தம் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
நீங்கள் அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறதால், நிச்சயத்துடனும், உறுதியுடனும் உங்களுக்கு வாக்கு கொடுக்க தேவன் ஆயத்தமாக இருக்கிறார்.
இந்த வாரம் இனிதாக அமைய உங்களை வாழ்த்துகிறேன்! இந்த வாரம் முழுவதும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கானவைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் இருப்பதற்கு நன்றி!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: அதாவது, மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஆண்டவர் மீது நம்பிக்க...
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=discovergodspromises