திட்ட விவரம்

தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி

The Armor of God

5 ல் 1 நாள்

உங்கள் வாழ்வில் உள்ள மிக தொந்தரவான விஷயங்கள்—ஐம்புலன்களால் நீங்கள் உணரும் விஷயங்கள்—உங்களுடைய உண்மையான சிக்கல்கள் அல்ல. காணக்கூடிய, சரீரப்பிரகாரமான உலகில் நடக்கும் எல்லாம் காணவியலாத, ஆவிக்குரிய உலகில் நடந்துகொண்டிருக்கும் மல்யுத்த போட்டி ஒன்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. உங்களுடைய உண்மையான சத்துரு—பிசாசானவன்—சரீரப்பிரகாரமான நிதர்சனத்திற்குப் பின் உள்ள ஆவிக்குரிய உண்மையை நீங்கள் புறக்கணிக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஏனென்றால் நீங்கள் சரீரப்பிரகாரமான கண்களால் காணக்கூடியவற்றில் அதிக நேரம் கவனம் கொள்ளும்போது, அவன் பரப்புக்கு கீழே பரவலாக வன்செயலை தொடர்ந்து புரிந்துகொண்டிருக்க முடியும். எவ்வளவு அதிகமாக அவனை புறக்கணிக்கிறீர்களோ, அவ்வளவு சுதந்திரமாக அவன் பாதிப்புண்டாக்க இயலும். சத்துருவானவன் கண்ணனுக்கு புலப்படாமல் இருக்கலாம், அனால் அவன் கற்பனையானவன் அல்ல. அவன் மிக உண்மையானவன், மேலும் அவன் நமக்கு எதிராக தொடர்ந்து போரிடுவதில் விடாப்பிடியானவன்.



விசுவாசியாக இருப்பது சத்துருவின் தாக்குதல்களுக்கு எதிராக உங்களுக்கு விதிவிலக்கு அளிப்பதில்லை, ஆனால் அது உங்களுக்கு தந்தையாகிய தேவனின் வல்லமையை— உங்களை காக்கவும் உங்களுக்கு நேரிட்டதை எதிர்த்திருப்பவும் கூடிய அந்த வல்லமையை நீங்களும் அணுக உதவுகிறது. நீங்கள் இந்த சண்டையில் வெற்றிபெற வேண்டுமென்றால்—நீங்களும் என்னுடன் கதையை மாற்றி அமைப்பதில், சத்துருவை வீழ்த்துவதில், மற்றும் உங்கள் வாழ்வில் அவனுடைய தாக்கத்தை முடக்குவதில் இணைந்துகொள்ள வேண்டுமென்றால்—முக்கியமானது, உங்களுக்கு எதிர்கொண்டுவருவதை விட அதிகமான ஆவிக்குரிய தசைகளுடன் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வதாகும்.



பவுல் எபேசியர் நிருபத்தை கண்ணுக்குப் புலப்படாமல், யாரும் கண்டிராத சாம்ராஜ்யங்களில் நடக்கும் ஆவிக்குரிய போரை குறித்து கவனத்தை ஈர்க்க மட்டுமல்ல, அதை தேவனோடு கிறிஸ்துவின் மூலமாக உறவுகொள்ளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் உள்ளார்ந்த பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் நோக்கத்திலும் பெரிதாக உபயோகப்படுத்தியுள்ளார். எபேசியரில், பவுல் ஆவிக்குரிய சர்வாயுதவர்கத்தின் மிக முக்கியமான ஆனாலும் கவனிக்கப்படாமலிருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தை முன்னிலைப்படுத்துகிறார்: அதுவே ஜெபம்.



ஒரு அறிஞர் கவனித்தது போல, " எபேசியர் நிருபம் விகிதாசார அடிப்படையில் 55% திற்கும் மேலான ஜெபத்தை நேரடியாகக் குறிக்கும் வசனங்களை கொண்டுள்ளது" பவுலின் நீளமான நிரூபமாகிய, ரோமரைப் போலவே.அவர் நிறைய சமயங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஜெபங்களையும் மேற்கொள்கிறார். அப்படி ஜெபிக்கும்போதோ... அவர் திறம்பட, வாசிப்பவர்கள் அவர் எதற்காக ஜெபிக்கிறார் என்பதை சரியாக தெரிந்துகொள்ளும்படியாக ஜெபிக்கிறார். அவர் ஜெபமானது அவர்களுடைய முழு வாழ்வின் போக்கையே மாற்றவல்லது என்று பவுல் அறிந்திருந்தார். ஆவிக்குரிய போர்க்களத்தில் வெற்றியும் ஜெபமும் பிரிக்கவியலாதவை.



எபேசியர் 1:18-21 மற்றும் 3:14-19ஐ வாசியுங்கள். பவுல் ஜெபம் செய்த எல்லா விஷயங்களிலும், நீங்கள் இன்று மிகவும் தேவையானதாக ஆண்டவரிடம் கேட்கக்கூடியது எது?
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Armor of God

தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக பிரிசில்லா ஷிரேர் மற்றும் Lifeway கிறிஸ்தவ வளங்கள்-க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு www.lifeway.com/ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்