திட்ட விவரம்

இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வணிகம்மாதிரி

Doing Business Supernaturally

6 ல் 2 நாள்

பரத்தில் இருப்பது போல பூமியிலும்



தொழிலதிபர்களாகிய நம்மிடம் தேவனிடமிருந்து முதல் வகுப்பு அழைப்பு உள்ளது என்பதை நேற்று அறிந்தேன். தீர்வுகளுக்காக ஏங்கும் இந்த உடைந்த உலகத்திற்கு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த வழிகளில் தேவனின் சக்தியைக் காட்ட நமக்கு வாய்ப்பு உள்ளது. இது நாம் ஜெபிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.



நாம் கர்த்தருடைய ஜெபத்தை ஜெபிக்கிறோம். ஆனால் அதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? நமது தொழில்களுக்கு அதில் என்ன அர்த்தம் உள்ளது?



அது பரலோகத்தில் இல்லை என்றால் அது பூமியிலும் இருக்கக்கூடாது என்று அர்த்தம். அது பரலோகத்தில் இல்லை என்றால், அது என் வாழ்க்கையிலோ அல்லது என் குடும்பத்திலோ அல்லது எனது தொழிலிலோ இருக்கக்கூடாது. இதற்குள் மன்னிப்பு இல்லாமை மற்றும் சச்சரவு மற்றும் வணிக தோல்வி ஆகியவையும் அடங்கும். இதில் மோசமான ஊழியர்கள் மற்றும் மோசமான முதலாளிகள் உள்ளனர். தரமற்ற வேலைப்பாடு மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இப்படியான எதுவும் தேவனின் திட்டத்தில் இல்லை.



எனவே, பரலோக ராஜ்யம் பூமியின் ராஜ்யத்தை ஆக்கிரமிக்கும்போது அது எப்படி இருக்கும்?



தேவனின் சித்தம் பரலோகத்தில் உள்ளது போல் பூமியிலும் செய்யப்படும். மக்கள், வணிகங்கள் மற்றும் சமூகம் செழிக்கும். கலாச்சாரம் நன்மைக்காக மாறுபடும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுகிறார்கள், மேலும் வணிக உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் செழிக்கிறார்கள்.



இயேசுவின் மகிமையும் அன்பும் வல்லமையும் வெளிப்படும். ஊழியர்கள் கடினமாக உழைப்பார்கள் மற்றும் அவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணைவர்களாக, பெற்றோர்களாக, நண்பர்களாக மற்றும் தேவாலய உறுப்பினர்களாக மாறுவார்கள். இந்த உலகின் ஒரு இணைப்பு ஆதி ஏதேன் தோட்டத்தின் அசல் வடிவமைப்பை நோக்கி நகர்த்தப்படும்.



இதில் தெளிவாக இருக்கும்போது, ​​நாம் வித்தியாசமாக ஜெபிக்கிறோம். கடந்த பத்து வருடங்களாக ஒரு வணிகத் தலைவராக, நான் சுவிசேஷத்திற்காக மற்றும் வயாதிகளுக்காக மற்றும் தேவாலய வளர்ச்சிகளுக்காக பிரார்த்தனை செய்துவந்தேன். நான் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக பிரார்த்தனை செய்தேன். ஆனால் நான் வியாபாரத்தில் வெற்றிபெற தேவனிடம் கேட்க வெட்கப்பட்டேன். இது நேற்று நான் பேசிய அந்த தவறான இருவகை கருத்தின் ஒரு பகுதி. இந்தப் பொய்யின் கைகளால் உங்கள் பிரார்த்தனையின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதா?



வாழ்க்கைக்காக மர சாமான்களை புதுப்பிக்கும் தொழில் செய்யும் ஒருவர் இருந்தார். அதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கடுமையானவை மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த அவர், தீர்வு காண முடியாவிட்டால் இந்தத் தொழிலை விட்டு வெளியேறத் திட்டமிட்டார். ஆர்கானிக் மற்றும் நச்சுத்தன்மையற்ற ஒரு புதிய மரத்தை அகற்றும் ரசாயனத்தை கண்டுபிடிப்பதற்காக அவர் தனது கடையில் டிங்கர் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு உயர் தரத்தைக் கொண்டிருந்தார்: அதாவது அவர் கண்டுபிடிக்கும் இரசாயனமானது பொதுவாக பயன்படுத்தப்படும் பிராண்டுகளைப் போலவே வேலை செய்ய வேண்டும் என்பது அவரது இலக்கு. அவரும் அவரது மனைவியும் இதற்காக தேவனிடம் பதில் கேட்டுக்கொண்டிருந்தனர்.



ஒரு நாள், தன் மனைவிக்கு மதிய உணவு கொண்டு வர வீட்டுக்கு வந்தான். அவள் கர்ப்பமாக இருந்தாள், அவள் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், விசித்திரமான தொடர் கடிதங்களுடன் அவள் கண்ட கனவைப் பற்றி அவனிடம் சொன்னாள். இது ஒரு இரசாயன சூத்திரம் என்பதை அந்த மனிதன் உணர்ந்தான். மீண்டும் தனது கடைக்குச் சென்று, இந்த இரசாயனங்களை ஒன்றாக இணைத்தார்.



இந்த கலவையானது நச்சுத்தன்மையற்ற மர சாமான்களை அகற்றுவதற்கான சரியான சூத்திரமாக மாறியது. மேலும் இது வணிக பிராண்டுகளாகவும் வேலை செய்தது. அவர் அதை தனது பிராந்தியத்தில் சந்தைப்படுத்தத் தொடங்கினார். தம்பதியினர் இறுதியில் இந்த காப்புரிமையை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்றனர். அவர்கள் ஒரு நல்ல ஆர்.வி.யை வாங்கி, அமெரிக்கா முழுவதும் சென்று ஊழியம் செய்ய வழியைக் கொண்டுள்ளனர்.



இன்று உங்கள் தொழிலுக்கு ஞானம் தேவையா? உங்கள் உலகில் தீர்வுகள் தேவைப்படும் பிரச்சனைகளை நீங்கள் காண்கிறீர்களா? தேவனிடம் பதில்கள் இருப்பதாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், மேலும் அவற்றை பரலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டுவர உங்களைப் பயன்படுத்த அவர் தயாராக இருக்கிறார். பதிலை எதிர்பார்த்து கேட்பது உங்கள் வேலை....



"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." யோவான் 16:13


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Doing Business Supernaturally

நான் பல ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்து வந்தேன். இந்த பொய்யானது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிகவும் பொதுவானது. நான் மதச்சார்பற்ற-புனிதமான ஒரு கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது என்னைத் தடுத்து நிறுத்தியது. பரத்தை பூம...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய கேட்வே ஊழியங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு: http://dbs.godsbetterway.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்