திட்ட விவரம்

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது மாதிரி

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது

5 ல் 1 நாள்

அமைதியான நேரம் - தேவனுடன் நம் இதயத்தை இணைத்துக் கொள்ளும் ஒரு நேரம்

நமது வேகமான வாழ்க்கையின் மத்தியில், தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களை உருவாக்குவது மிக அவசியம். இந்த பரிசுத்தமான வழிமுறை நம் ஆத்துமாவுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உளவியல் நன்மைகளையும் தருகிறது. நம் வாழ்வின் பல்வேறு பகுதிகளையும் மேம்படுத்துகிறது. இன்று, தேவனுடைய இதயத்திற்கு இணைந்து செயல்படும் நேரத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, நமது ஆன்மீக பயணத்தில் அதன் தாக்கத்தை ஆராய்வோம்.

அமைதியான நேரம், பெரும்பாலும் இதயத்திற்கு-இதயம் நம் சிருஷ்டிகருடன் இணைந்து செயல்படுவது என்பதாகும. இது கிறிஸ்தவ ஆன்மீக பயணத்தில் ஒரு பரிசுத்தமான மற்றும் தனிப்பட்ட நடைமுறையாகும். இதில் ஜெபம், ,தனிப்பட்ட தியானம், தேவனை துதிப்பது, வேத வாசிப்பில் ஈடுபடுவது போன்றவை அடங்கும். அமைதியான நேரத்தை முதன்மைப்படுத்துவதன் மூலம், நமது நெருக்கடியான நாளை தொடங்குவதற்கு முன், முதலாவதாக தேவ பிரசன்னத்தையும் வழிகாட்டுதலையும் நாடுகிறோம்.

அவர் நம்முடைய தேவன் என்பதை நம் மனதின் அடியாளத்தில் "அமைதியாக இருந்து அறிந்துகொள்ள" வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. நம் அமைதியில், நாம் அவருடைய குரலுக்கு நம் மனதினை திறந்து, நம் வாழ்வில் அவரை உயர்த்த அனுமதிக்கிறோம். மத்தேயு 6:6, ஜெபிக்க நம்முடைய தனிப்பட்ட இடத்திற்குள் நுழையுமாறு நம்மைத் தூண்டுகிறது. நம் கண்களால் காணாத நமது பிதா நம்முடைய இருதயப்பூர்வமான உண்மை மன வாஞ்சையை காண்கிறார் என்று நமக்கு உறுதியளிக்கிறது. மேலும், யாக்கோபு 4:8, தேவனிடம் நெருங்கி வருவதற்கு நம்மை ஊக்குவிக்கிறது, அவர் நமக்குப் பிரதிபலன் கொடுப்பார் என்று உறுதியளிக்கிறார்.

அமைதியான நேரத்தில், நம் மனம் உலகின் இரைச்சல் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுவிக்கப்படுகிறது. எனவே இவ்வித அமைதி நேரத்தில் நம்மில் மேம்பட்ட படைப்பாற்றல், கவனம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றை வளர்க்கிறது. நமது மனதை அமைதிப்படுத்துவதன் மூலம், புதிய யோசனைகள், புதுப்பிக்கப்பட்ட படைப்பாற்றல் உருவாகிறது. ஒழுக்கத்திற்கான ஒரு சிறந்த இடத்தை உருவாக்குகிறோம்.

இவ்வித அமைதி நேரம் நம்மில் சுய விழிப்புணர்வு, முன்னோக்கு மற்றும் ஆன்மீகத்திற்கான சக்திவாய்ந்த ஒரு மாற்றத்தை உருவாக்கும் மன உறுதியையும் நம்மில் பெற்றுக் கொள்கிறோம்.

இத்தகைய நேரங்களில் வெளிப்புற தாக்கங்கள் இல்லாத நிலையில், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நோக்கம் இவற்றில் தெளிவைப் பெறுகிறோம். எண்ணில் அடங்காத நுண்ணறிவு மற்றும் ஞானத்தைப் பெறுவதன் மூலம், தேவனின் கண்ணோட்டத்தில் இருந்து சூழ்நிலைகளை நாம் உணரத் தொடங்குகிறோம். மேலும் இவ்வித அமைதி நேரம், நம்மை ஆன்மீக மண்டலத்துடனான தொடர்பை ஆழமாக்குகிறது, மேலும் தேவ சத்தத்தை இன்னும் தெளிவாகக் கேட்டறிய உதவுகிறது.

தேவனுடனான அமைதியான நேரம் என்பது நமது ஆன்மீக பயணத்தை வளப்படுத்தும் ஒரு மாற்றும் பயிற்சியாகும். தேவனுடன் அமைதி நேரத்தை முக்கியப்படுத்தி கவனச்சிதறலற்ற நேரத்தை செலவிடுவதன் மூலம், படைப்பாற்றல், கவனம், சுயக்கட்டுப்பாடு, சுய விழிப்புணர்வு, முன்னோக்கு மற்றும் ஆன்மீகத்தின் ஊற்றுக்கண்ணைத் தட்டுகிறோம். நாம் இந்தப் பலனளிக்கும் பயணத்தைத் தொடங்கும்போது, ​​அமைதியாக இருப்பதற்கும், அவருடைய பிரசன்னத்தைத் தேடுவதற்கும், அவரை நெருங்குவதற்கும் வேதப் போதனைகளை நினைவில் கொள்வோம். அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதற்கு நம் இதயங்கள் திறந்திருக்கட்டும், நமது அமைதியான நேரம் நம் அன்பானவர்களுடன் உரையாடும் புகலிடமாக இருக்கட்டும்.

  1. நம் தேவனோடு அமைதியான நேரத்தை செலவிடுவது நமது படைப்பாற்றல், கவனம் மற்றும் சுயக்கட்டுப்பாட்டை எவ்வாறு மேம்படுத்துகிறது?
  2. அமைதி நிலை நமது சுய விழிப்புணர்வு, முன்னோக்கு மற்றும் ஆன்மீகத்தை எந்த வழிகளில் பாதிக்கிறது?
  3. நமது அமைதியான நேரம் கவனச்சிதறல்களால் இடையூறு இல்லாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது?
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது

தேவாதி தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவது மிக முக்கியம். சங்கீதம் 46:10-“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்”. இதனால் அமைதியாக இருக்கவ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்